தென்காசிப் பாண்டியர்


மாலிக் கபூர் படையெடுப்புக்குப் பின்பு பாண்டியர் மதுரையை மீட்கும் பெரிய வலிமை பெறவில்லை... அடுத்ததாக மதுரை சுல்தான்கள் 50 ஆண்டு ஆட்சியிலும் மதுரை கைவிட்டுப் போனது. அதற்குப் பின் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர் ஆளத் தொடங்கினர். அவர்களுள் ஒருவர் பராக்ரம பாண்டியர். 

History and culture of tamilnadu
(Chitra Madhavan) நூலில் பின்வரும் செய்தி கூறப்பட்டுள்ளது.‌

பராக்ரம பாண்டியன் கனவில் தோன்றிய சிவபெருமான் உத்தர காசியில் தன்னுடைய ஆலயம் அழிந்து விட்டதால், தெற்கே ஒரு காசியை உருவாக்கும்படி பணித்தார். அதாவது முசுலிம் சுல்தான்கள் காசி விஸ்வநாதர் கோவிலை உடைத்து  அழிக்கப்படும்போது பாண்டியர் இங்கே தென்காசி நகரில் காசி விஸ்வநாதர் ஆலயத்தை எழுப்பியுள்ளனர் (1447ஆம் ஆண்டு). காசி நகர பிராமணர்களுக்குத் தென்காசியில் அடைக்கலமும் தந்துள்ளனர். 

காசியும், கங்கையும் தமிழர்களால் புனிதமாகக் கருதப்பட்டுள்ளது என்பது தெளிவு. 
Thanks Vishnu sarma

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...