நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடார் ஜாதியும் கிட்டத்தட்ட தாழ்த்தப்பட்ட ஜாதி என்ற நிலைக்கு திட்டமிட்டுத் தள்ளப்பட்டனர்.கோயிலை கட்டுவித்த நாடானை கோவிலுக்குள் விட மாட்டார்கள்.. தலையில் துண்டு கட்ட அனுமதியில்லை. செருப்பு போட அனுமதி இல்லை. சில தெருக்களில், ஏன், நீர் நிலைகளில் கூட அனுமதி மறுக்கப்பட்டது. நாடார் குல பெண்கள் தங்களின் மார்பில் துணியை அணியக்கூடாது. அவ்வளவு தூரம் ஆதிக்க சாதிகளின் ஒடுக்குமுறை. ஆனால் இன்று நாடார்கள் தங்களுடைய பூர்வ புண்ய பலாபலனால், வளர்ந்துள்ளனர்.. எப்படி இந்த வளர்ச்சி?
ஒவ்வொரு ஊரிலும் சிறு குழுவாக உறவின்முறை என்ற பெயரில் ஒன்றிணைந்தார்கள். ஒற்றுமையாக உழைத்தார்கள். தங்கள் உழைப்பில் ஒரு பகுதியை அந்த குழுவிற்கு கொடுத்தார்கள். அதை மகமை பண்டு என்றார்கள். தொழில் தொடங்கினார்கள். அந்த தொழிலுக்கு பண உதவி தேவையென்றால் மகமை பண்டில் இருந்து கொடுத்து உதவினார்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சமூகம் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட ஆரம்பித்தது.
மூவேந்தராக முடிசூட்டி அரசாண்ட தாங்கள் கட்டிய கோயிலில்,எங்கே எல்லாம் அனுமதி மறுக்கப்பட்டதோ அந்த கோயில்களுக்கெல்லாம் மகமை பண்டுவில் இருந்து பணத்தை வாரி இறைத்தார்கள். கோயில் கதவுகள் திறந்தன. ஒரு காலத்தில் திருச்செந்தூர் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட அதே நாடார் ஜாதி , இன்று கோயிலில் பல அறங்காவலராக முக்கிய பொறுப்பை வகிக்கின்றனர் .
அடங்க மறு, அத்து மீறு, திரும்ப அடி என்று அவர்கள் பிறர் மீது துவேசத்தை வளர்க்கவில்லை. சமுதாய அங்கீகாரம் பெற, யார் வீட்டு பெண்ணையும் இழுத்துக்கொண்டு பொறுக்கித்தனம், கட்டபஞ்சாயத்து, வன்கொடுமைசட்டத்தைக் கேடயமாகக் கொண்டுஓடவில்லை. மேடை மேடையாக ஏறி “நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள்” என்று புலம்பவில்லை. வன்முறையை தூண்டவில்லை.இட ஒதுக்கீடு...முன்னுரிமை தா என்று ஓலமிடவில்லை.அரசு இலவசமாகத் தரும் என்று பிள்ளையைப் பெற்றுப் போடவில்லை. ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் உணர்ந்திருந்தார்கள்.உழைப்பு.,ஓயாத உழைப்பு,முறையான உழைப்பு, பொருளாதார வளர்ச்சி தான் சமூகத்தின் வளர்ச்சி என்பது தான் அது. அமைதியாக, ’தான் முன்னேற என்ன வழி?’ என்பதை நோக்கி ஓடினார்கள். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment