பெண்கள் வாழ்வில் கல்வி விளக்கேற்றிய திருவாலவாய நாடார்
விருதுநகர் கொடைவள்ளல் .திரு. தி.அ.திருவாலவாய நாடரின் கல்வி திருப் பணியும் , கருணை திருவுள்ளமும் கல்விக்காகத் தன் உடல், பொருள் , ஆவி அத்தனையும் பெண் கல்விக்காக கொடுத்து , கல்விக் கூடம்உருவாகும் அளவிற்கு ஊர் வளர்ந்திட , நல்ல விதை விதைத்து , நல் உரமும் போட்டவர் தான். திருவாலவாய நாடார்.
1910 ஆம் ஆண்டு, வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் தான் ஏராளம் சென்ற நூற்றாண்டில். அடுப்பூதும் பெண்ணிற்கு கல்வி எதற்கு ???என்று எகத்தாளம் பேசிய எத்தர்கள் நிரம்பிய காலம் அது .மாட்டு தொழுவதிலும் , காட்டு வேலையுளும் களங்கமில்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பெண்டிரின் பெருமைகள் எல்லாம் சிதறடித்து சிறுமையாக்கிய கொடுங் காலமது .
இதை கண்டு மனம் பொறுக்காத மனிதருள் மாணிக்கராம் திருவாலவாய நாடார் , பெண்களே இன் நாட்டின் கண்கள் , பெண் கல்வி பெற்றால் நாடே வளம் பெறும் என்ற கருத்தை தலை மேற்கொண்டு , கல்வி கற்க அனுப்பாத கயவர்களை கண்டித்து, வீடு வீடாக சென்று வீணர்களிடம் வாதிட்டு கல்லடியும் , சொல்லடியும்,விளக்கேற்றும் பெண்களின் வாழ்வில் விளக்கேற்றியவர்
ஊரில் ஒரு பள்ளி கூடம் கட்ட கடுமையாக உழைத்தவர் . தன் மனைவி மங்கமாளின் இருப்பிடத்திலேயே பள்ளியமைக்க விரும்பி , பண்போடு கொடுத்த கொடையாளர். மங்காவின் மச்சி வீடு என்ற பெயரே இப்பொழுது மருவி "மாங்கா மச்சி" என்று அழைக்கப் படுகிறது.
பாக்கு வியாபாரத்திலே கிடைத்த பங்கை பள்ளி கட்டிட நிதிக்கு தயங்காமல் அளித்தவர்.கட்டிடப் பணிக்கு வீதியில் கிடக்கின்ற கல்லையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்று சிறப்பு செய்தவர்.இவ்வளவு சுமைகளின் நடுவே மலை போல எழுந்து , மலர் போல விருதுநகர் எங்கும் மணம் பரப்பி ,அழியாப் புகழ் பெற்று , அரும் பெறும் திறமைகள் கொண்ட பெண்களை உலகமெங்கும் அனுப்பி , உன்னத வளர்ச்சியை அடைந்து, நூற்றாண்டுகளையும் தாண்டி , நூதனம் பல பெற்று விளங்குகிறது" சத்திரிய பெண்கள் பள்ளி" திருவாலவாய நாடாரின் கடும் உழைப்பாலும் கடும் முயற்சியாலும் கட்டப்பட்டது 3 குழந்தைகளில் தொடங்கியது சத்திரிய பெண்கள் பள்ளி இப்போது அது பல கிளைகளோடு 10000 குழந்தைகள் படிக்கும் deluxe வசதியுடன் நடக்கிறது விருதுநகரில் பல IAS,JUDGE என்று சாதனை பெண்களை உருவாக்கியுள்ளது பெண்கள் வாழ்வில் விளக்கேற்றியவர் அவருக்கு அந்த பள்ளியில் சிலையும் வைக்கப்பட்டுள்ளது திருவாலவாய நாடார் புகழை போற்றி வணங்குவோம் காமராஜர்,சங்கரலிங்க நாடார் பிறந்த மண் விருதுநகர் இப்படி பட்ட நல்ல மனிதர்கள் வாழ்ந்ததினாலே விருதுநகர் மாவட்டம் இன்றளவும் படிப்பில் முதலிடம் வகிக்கிறது
No comments:
Post a Comment