"சிட்டிசன்" படத்தில் கடைசியாக அஜித் அவர்கள் தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கு என்ன மாதிரியான தண்டனை தரவேண்டும் என்று பேசும் வசனம் மிகப் பிரபலம், ஆனால் அவர் கூறிய அந்த தண்டனை நம் மண்ணில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை தற்போதைய கடலூர் மாவட்டம் "காட்டுமன்னார்கோயில்" அனந்தீசுவரம் கோயில் எடுத்துரைக்கின்றது.
"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ
வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்............................................... தம்பி
ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........................ராமத்தம்
பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும்.................."
என்று தொடரும் இந்த கல்வெட்டில்.
மாமன்னர் ராஜ ராஜ சோழனின் அண்ணன் "ஆதித்த கரிகாலனை" கொன்றவர்களான "ரவிதாசன், சோமன், பரமேஸ்வரன்" ஆகிய மூன்று சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும், இவர்களுக்கு பெண் கொடுத்தோருக்கும் , இவர்கள் உடன் பிறந்தோருக்கும், இவர்கள் உறவினர்களுக்கு பெண் கொடுத்தோரும், பெண் எடுத்தோரும், இவர்கள் தாயோடுப் பிறந்த மாமன் மார்களும்,அவர்கள் உடபிறந்த பெண்களை எடுத்தவர்களும்அவர்களுக்கு பிறந்த பெண்களை எடுத்தவர்களும் என ஒரு பட்டியல் நீண்டு இவர்களை உடமைகளும், நிலங்களும் அரசாங்கத்தால் பறிக்கப்பட்டு, இவர்களை வெறும் கையுடன் சோழ தேசத்தை விட்டு நாடுகடத்தப்பட்டிருப்பர் என்பது உறுதியாகிறது.
கோயில்களை புறக்கணிப்பதால் எவ்வளவு விசயங்களை இழக்கிறோம் என்பதை தமிழர்கள் இனியாவது உணர்வார்களா???
Thanks- Sasi Dharan
"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ
வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்............................................... தம்பி
ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........................ராமத்தம்
பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும்.................."
என்று தொடரும் இந்த கல்வெட்டில்.
மாமன்னர் ராஜ ராஜ சோழனின் அண்ணன் "ஆதித்த கரிகாலனை" கொன்றவர்களான "ரவிதாசன், சோமன், பரமேஸ்வரன்" ஆகிய மூன்று சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும், இவர்களுக்கு பெண் கொடுத்தோருக்கும் , இவர்கள் உடன் பிறந்தோருக்கும், இவர்கள் உறவினர்களுக்கு பெண் கொடுத்தோரும், பெண் எடுத்தோரும், இவர்கள் தாயோடுப் பிறந்த மாமன் மார்களும்,அவர்கள் உடபிறந்த பெண்களை எடுத்தவர்களும்அவர்களுக்கு பிறந்த பெண்களை எடுத்தவர்களும் என ஒரு பட்டியல் நீண்டு இவர்களை உடமைகளும், நிலங்களும் அரசாங்கத்தால் பறிக்கப்பட்டு, இவர்களை வெறும் கையுடன் சோழ தேசத்தை விட்டு நாடுகடத்தப்பட்டிருப்பர் என்பது உறுதியாகிறது.
கோயில்களை புறக்கணிப்பதால் எவ்வளவு விசயங்களை இழக்கிறோம் என்பதை தமிழர்கள் இனியாவது உணர்வார்களா???
Thanks- Sasi Dharan
No comments:
Post a Comment