உலகில் முதன் முதலில் தோன்றிய தமிழனின் நவீன நகர நாகரிகம்





பூம்புகார்; உலகில் முதன் முதலில் தோன்றிய தமிழனின் நவீன நகர நாகரிகம்.
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார்11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியஒரு பிரம்மாண்ட நகரம்  உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாகஇருக்கக்கூடும் என, இங்கிலாந்தைச் சேர்ந்தஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம்ஹான்காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இவர் கடந்த 2001-ம் ஆண்டு பூம்புகார்கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல்ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக்கண்டறிந்துள்ளார்.
இந்த ஆராய்ச்சி, தற்போதைய வரலாற்றுஆய்வாளர்களின் கருத்தான "மெசபடோமியா"பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5000ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரீகம்தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனதெரிவிக்கிறது.
கிரஹாம் ஹான்காக் என்பவர் இங்கிலாந்தைச்சேர்ந்த உலகப் புகழ் பெற்ற ஆழ்கடல்ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள்வரலாற்று உலகில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியவை.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில்அமைந்துள்ள தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக்கழகம் என்ற நிறுவனம் கடந்த 1990 ம்ஆண்டில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார்நகரக் கடற்பகுதியில் ஓர் ஆய்வினைமேற்கொண்டது.
இந்த ஆய்வுகள் 93-ம் ஆண்டுவரை தொடர்ந்துநடைபெற்றன. ஆய்வின் போது, பூம்புகார்கடற்பகுதியிலிருந்த சுமார் 3 கி.மீ.தொலைவிற்குள் பல வட்ட வடிவமானகிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடிவரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பதுகண்டறியப்பட்டது.
இது தவிர சங்க காலத்தைச் சேர்ந்தது எனகருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன "ட"வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
இத்துடன், நீரில் சுமார் 23 அடி ஆழத்தில்குதிரை குளம்பு வடிவில் 85 அடி நீளமும், 2 மீஉயரமும் கொண்ட பல பொருள்கள்கண்டறியப்பட்டன.இவை அனைத்தும்பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம்மூழ்கி இருக்கக்கூடும் என்பதைஉறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த
போதிலும்,தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்,தன்னுடைய ஆய்வை நிதிப்பற்றாக்குறைகாரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.
இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டுஇந்தியாவிற்கு வருகை புரிந்த கிரஹாம்ஹான்காக், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக்கழகத்தினரிடம் பூம்புகார் பற்றி விவரங்களைக்கேட்டறிந்தார்.
நிதிப்பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சிபாதியில் நிறுத்தப்பட்டதை அறிந்த அவர்,இங்கிலாந்தைச் சேர்ந்த "சானல் 4" என்றபிரபல தொலைக்காட்சி நிறுவனம்,அமெரிக்காவைச் சேர்ந்த "லர்னிங் சானல்"என்ற தொலைக்காட்சி நிறுவனம்ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்தியஆழ்கடல் ஆராய்ச்சி கழகத்தின்ஒத்துழைப்புடன் 2001-ம் ஆண்டுஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
அந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன "சைடு ஸ்கேன்சோனார்" என்ற கருவி பயன்படுத்தப்பட்டது.இந்தக் கருவி பூம்புகார் கடற்பகுதியில்குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமானதெருக்களுடன், உறுதியான கற்களால்கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன்கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம்மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக்காட்டியது.பின்னர், அக்காட்சிகளை கிரஹாம்ஹான்காக் நவீன காமிராக்கள் மூலம் படம்எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனதுஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக், அந்தநகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில்புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இந்தநகரம் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்புமூழ்கி இருக்கக்கூடும் என ஹான்காக்கருதினார்.தனது ஆராய்ச்சியைப் பற்றியவிவரங்களை அவர், இங்கிலாந்தின் புகழ்பெற்றடர்ஹாம் பல்கலைக்கழகத்தின் நிலவியல்துறைப் பேராசிரியர் கிளன் மில்னேஎன்பவரிடம் தெரிவித்தார். இதன்மீது ஆராய்ச்சிமேற்கொண்ட கிளன் மில்னே, ஹான்காக்கின்கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.
சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்புகடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக்கூடும்என்றும், அதனை வைத்துப் பார்க்கும் போதுஇந்த நகரம் 11,500 ஆண்டு கால பழமைவாய்ந்தது என்ற முடிவினை அறிவித்தார்.
இதன்மூலம் உலகில் நவீன நாகரிகம், பூம்புகார்நகரில் 11,500 ஆண்டுகளுக்கு முன்புதோன்றியது தெளிவாகிறது.
பூம்புகாரில் மேற்கொண்ட ஆராய்ச்சியின்படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் அண்டர்வேர்ல்டு என்ற பெயரில்தொலைக்காட்சித் தொடராக இந்த ஆண்டுபிப்ரவரியில் ஒளிபரப்பப் பட்டது. இந்தத்தொலைக்காட்சித் தொடர் உலக வரலாற்றுஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்தில்ஆழ்த்தியுள்ளது. இப் படங்களை, கடந்தவாரம்பெங்களூரில் நடந்த கண்காட்சியில் கிரஹாம்ஹான்காக் வெளியிட்டார்.
இவை குறித்து மேலதிகமாக அறிய பயன்படுத்தக் கூடிய தேடு சொற்கள்
பூம்புகார்
Graham Hancock

No comments:

Post a Comment

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு