குட்டம் மார்த்தாண்டன் பற்றிய குலசேகரன்பட்டினம் கல்வெட்டு
காலம் - கி.பி.1752 ஐச் சேர்ந்த 98 வரிகளைக் கொண்ட கல்வெட்டு
முன்புறம்
1. உ சாலிவாகன சகாப்தம்
2.......ன் மெற் சொல்லாநின்ற பிறமோத்
3. தை.................................................................
4. ம்மியும் [ நஷ்ஷத்திரமும்]....
5. மா படியும்............யும் கலி
6.....டிக் காணமும்........
7.த்த................யொம்
8. பிரத........தன்ம..........ப்பட்டயம்
9. நிலை நாட்டாவது ராசமன்னிய...
10. ர்தளவாய்[தீத்தார]ப்ப முதலியார
11. வர்கள் அதிகாரத்தில் குலசெகர
12. ம்பட்டணம் குமாரசுவாமிமூப்பனார்
13.பண்டாரம் செட்டியார் [பிச் ]சையாண்
14. டி செட்டியார் உடங்குடி கண்டு
15. கொண்டாபிள்ளை முதலாகிய
16.பட்டடையாரும் அரசூர் மாத்தாண்
17. டப்பிள்ளைமுதலாகிய[வெள்ளா]
18. ம் பத்தாரும் குட்டம் சந்திர ம
19. ரத்தாண்டப் பணிக்க நாடான்
20. குமாரவீர மாற்தாண்ட நாட
21.ரன் முதலாகிய சாண்பத்தாரு
22. ம் மத்துமுள்ள நாட்டார் நாடாக்
23. கள் சகலருமொம் நம்முடைய
24. நாட்டிலிருக்கிற பலபட்டை
25.செருகுடிச் சாணார் பனைமரச்ச
26ரணார் மினைகெடன் முக்காந்த
27. மார் மலையாளத்துச் சாணார் உள்
28. ளிட்டாருக்குச் சாதனப் பட்டையம்
29. மெளுதிக்குடித்தபடி பட்டைய
30. மாவது பட்டடையார் சாணார் இரு
31.ந்த ஊருக்கு பகுதிமன் வகை
32. ஊர்ச்சன வரியும் ஏறின
33. பனைக்கு வாரமும் எடுத்த செ
34. ரத்துக்குக் கடமை பாட்டமு
35. ம் மாமூல்படிக்கு ரெட்டியும்
36. அரமனைச் சனவரியும் ராசியா
37. க வெகுமான வரியும் வாங்கிக்
38. கொள்ளுகிறதெ அல்லாது வெறெ
39. தெண்டாம் பரும்பிடி வாங்
40. கிறதென இல்லைக் கிறாமத்தி
41. லெ ஊரான் நிலைமை கா
42. றன் குடியிருக்கிற வரையிலும்
43. குடிபோய் விட்டாலும் அந்த ஊ
44. ரிலிருக்கிற குடியான பெரிட
45. த்தில் தெண்டம் வாங்கறதெ இல்
46. லை நிலமைக் காறன் நீக்கி
பின்புறம்
47. பொதுவாங்கி வ
48. ந்த................................
49. ............பது ஆ சி.......வா
50. ............தி.............
51. ..........................பெற வெணு
52. மென்று........லாக
53. வெ................ந்து வாரா
54. கிறதெ.................வாது கரு
55. ப்பு கட்டி [எ] க்கிறதி
56. ல்லதெ................புள்ளியி
57.ல்லதெ தெண்டம் பிடிக்
58. கிறதுமில்லை இந்தபடி
59.எழுதின பட்டையப்படி
60. க்கு வாங்கிக் கொள்
61. வொ மாகலு இதற்
62. கு அரமனையார் தெண்
63. டம் பரும்பிடி வா[ங்க]
64. வெணுமென்று சொ[ன்]
65.னால் ஒருதனாலும் இ
66. தற்கு உடனொதுச் சம்ம
67. திக்கிற தில்லை இதற்கு[அ]
68. னு கூலம் பண்ணின
69. பெர் காசியிலெ கொடி
70. அசுமெதி யாகம் ப
71. ணின பலனும் [ம]
72. க்கதில் கட[ன்] செய்த
73.பலனும் பெறுவார்களா
74. கவூ இதற்கு இடைகூறு
75.நினைத்த பெர் மாதா
76. ப்பிதாவை வரை செ
77. த தொசத்திலெ
78. மாத்ரு கெவுனம் ப
79. ண்ணின தொசத்தி
80.லும் பொவாராக
81. வூ இதற்கும் தட்டி ந
82. .....................த்தின பெர் சித வ
83. நத்திற் வதை செ
84. ய்த பாவத்திலெ
85. பொவாராகவூ இப்
86. படி சம்மதித்து சிவ
87. ...............................................
88........டுத்தொம் நாட்டார்...நாடாகழுமொம் பட்டடை.....
89.....சாணார் மனிக் கெடன் முக்[கந்த]மார் மலையாளத்து
90. சாணார் உள்ளி[ட்டா]ருக்கு குமார......ண்டார் பிச்சையாண்
91................கொண்டபிள்ளை மாத்தாண்டன் சந்திரமாத்தாண்ட
98. ..............நாடான் குமாரவீரமாத்தாண்ட நாடான் னென்.
கி.பி 1750 மதுரை நாயக்க அரசு முற்றிலும் வீழ்ச்சி அடைந்து மறைந்து விட்ட நிலையில் நவாப் அன்வர் உதீன் அரசின் நிர்வாகத்தில், தளவாய் தீத்தாரப்ப முதலியார் தென் நிர்வாகியாக நீடித்த சூழலில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தீத்தாரப்ப முதலியார் வெள்ளான் பற்று, சாண் பற்று என்ற
இருவகை நிலங்களை உரிமையாகப்பெற்றிருந்த மானவீர வளநாட்டில்
குலசேகரன்பட்டணம் குமாரசுவாமிமூப்பனார்
பண்டாரம் செட்டியார் பிச்சையாண்டி செட்டியார் உடங்குடி கண்டுகொண்டா பிள்ளை அரசூர் மாத்தாண்டப்பிள்ளை
குட்டம் சந்திர மாற்த்தாண்டப் பணிக்க நாடான்
குட்டம் குமாரவீர மாற்த்தாண்ட நாடான்
மேற்கண்ட பிரபுக்கள் ஆட்சியுரிமையுடன் வரிவசூல் செய்துள்ளனர். வேளாளர் மற்றும் நாடான் சாதியினருக்கு வழங்கிய வரிச்சலுகைகள் இக்கல்வெட்டில் அரசாணையாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
----------------------------------------------------------
முனைவர் தவசிமுத்து மாறன்
Image may contain: people standing and outdoor
Image may contain: 3 people, people standing and outdoor
No comments:
Post a Comment