நாடன்



#Devadas

நாடன் என்ற சொல் முதலில் முல்லை, குறிஞ்சி நிலங்களின் தலைமகன் களை க் குறித்த சொல்லாக இருந்தது. பின்னர் இச் சொல்  தமிழர்களின் அரசகுல தலைமகன்களை குறிப்பதானது. சங்க தமிழ் இலக்கியங்கள் நாடன் என்ற சொல்லினால் பல பாடல்களில் அரசர்கள்  சிறப்பிக்க பட்டுள்ளனர். வேடர், இடையர், அரசர் என  முக்குலங்களாக வளர்ச்சி அடைந்திருந்த அரசர்களும் அரச குல குடிகளும் உயர்நிலையில் இருந்துள்ளனர். அரசகுலத்தின் தலைமகன்களை நாநிலத் தலைவர் களாக பாடல்களில் புலவர்கள் பாடி உள்ளனர். புறநானூற்றில் சோழப்பேரரசர் குளமுற்றம் போரில் கொன்று புதைத்த சேரன் செங்குட்டுவனின் மகனான வஞ்சிமுற்றம் வெள்ளிமாடத்தில் வாழ்ந்த கோ கோதை மார்பனை பொய்கையார் "நாடன் என் கோ?ஊரன் என் கோ? 
பாடுஇமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என் கோ ?யாங்கனம் மொழிகோ,ஓங்குவாள்  கோதையை?" என்று பாடியுள்ளார். இதனால் இந்த நாடன் என்ற சொல் ஒழுக்கம் உடைய,நேர்மை, இரக்கம், பொய்யாமை, ஈகை குணம் அதிகம் கொண்ட நீதி தவறாத பிறரிடம் தனக்காக எந்த உதவியும் எதிர்பாராமல் பிறர்க்குதவி செய்து வாழ்ந்த அரசர்களைக் குறித்தது  என்பதை உணரலாம். இச்சொல்லை தகுதி வாய்ந்த பூர்வீக தமிழ் குடிகள் பயன் படுத்துவதால் எவ்வித இழுக்கும் ஏற்படாது. நாடன் என்ற சொல் நீண்டு நாடான் ஆனது. நாடான் என்பது மரியாதை நிமித்தம் நாடார் ஆகி முன்னாள் மூவேந்தர்கள் வழி வந்த தமிழ் குடிகளைக் குறித்த சாதி பெயர் ஆகி விட்டது. கி.மு 150ஆம் ஆண்டு காரவேலன் கல்வெட்டு படி தமிழ் அரசகுலத்தினர்கள் ஒற்றுமையின்றி ஆட்சியாளர்களுக்கு துரோகங்கள் இழைத்து பிற இனத்தவருடன் கலந்து தமிழர்கள் ஆட்சியை அகற்றி தமிழகத்தில் அந்நியர் ஆட்சியை நிறுவினர்.இவர்களை புறநானூற்று பாடல்களில் "இழிசினன் " "இழிபிறப்பாளர்" என குறிப்பிட்டுள்ளது. தற்போது பலரும் தங்களை இந்து நாடார், கிறித்துவ நாடார் என பதிவு செய்தும்,  ஆளுக்கொரு நாடார் சங்கங்கள் ஏற்படுத்திக் கொண்டு செய்து வரும் செயல்களைப் பார்க்கும் போது இவர்களுக்கு நாடார்களுக்கு உரிய தகுதிகள் எதுவுமே இல்லை என்பது உறுதியாகிறது. இவர்களில் பலர் போலிநாடார்கள் என்பதை பிற சமூகத்தினருக்கு தெளிவாக  புரிய வைத்துக் கொண்டிருக்கின்றனர். அரச குலத்தின் வழக்க படி நாடான் எவரும் இவ்வுலக வாழ்க்கையை இழக்கும் போது இவ்வுலகில் எவருக்கும் கடனாளி யாக செல்ல கூடாது. இதனை புறநானூற்று 311ஆவது ஔவையாரது பாடல் உறுதி செய்யும். இந்த இரங்கல் பாவில் தகடூர் வேந்தர்  அதிகமான் நெடுமான் அஞ்சி போர்க்களத்தில் இறந்த பலரது உடல்களை குழிதோண்டி புதைத்து விட்டு பின்னர் அவர்கள் கடன் களைத் தீர்த்ததாக பாடியுள்ள பாடல் உறுதி செய்யும். பலரும் ஆர்வ கோளாறு காரணமாக சுயமரியாதையின்றி, ஒழுங்கீனமாக செய்யும் பதிவுகள் பிறர் மனதில் பதிவர்களது பிறப்பொழுக்கம் குறித்து ஐயங்களை உருவாக்கும்.  எனவே, நாடன் என்ற சொல்லுக்குரிய மரியாதை, மாண்பினை காக்க பாடுபடுங்கள்.

No comments:

Post a Comment

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு