நீதிபதியால் பீடி சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட தபி சொக்கலால் ராம்சேட் அவர்கள் நினைவு நாளில்(22/06/2025) அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்துவோம்
குடிசைத் தொழிலை நேர்மையாக செய்த காரணத்தினால் குபேரனாக வாழ்ந்தார் தபி சொக்கலால் ராம்சேட் அவர்கள் நாடார்களுக்கு எப்பவுமே தொழில் போட்டியாக இருப்பது உடன் பிறந்தவர்கள் அல்லது உறவினர்கள் அல்லது தாம் பிறந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் தொழில் போட்டியாக இருப்பதை நாம் பார்த்து வருகிறோம் இதே போல தான் அந்த காலத்திலும் தபி சொக்கலால் ராம் சேட் அவருடைய முன்னேற்றத்தில் பொறாமை கொண்டவர்கள் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அவர் மீது ஒரு வழக்கு தொடுத்தார்கள் என்ன வழக்கு என்றால் தபி சொக்கலால் ராம்சேட் அவர்கள் தயாரிக்கும் பீடி மட்டுமே சிறந்தது என்பது போல அவருடைய விளம்பரங்கள் இருக்கிறது இதனால் அவருடைய விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று சொல்லி சில நபர்கள் வழக்கு தொடுத்தார்கள் இவருடைய வழக்கு நடந்த காலம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலம் அந்த ஆங்கிலேய நீதிபதிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை வழக்கு நடந்து கொண்டிருக்கிறது இறுதியாக நீதிபதி ஒரு முடிவெடுக்கின்றார் 10 கம்பெனிகளில் உள்ள பீடிகளை வாங்கி வரச் சொல்கிறார் ஒவ்வொரு கம்பெணியிலும் உள்ள பீடிகளில் ஒவ்வொன்றை எடுக்கிறார் அதில் உள்ள லேபிள்களை கிழிக்கின்றார் நீதிபதிக்கு மட்டும் எந்த பீடி எந்த கம்பெனியை சேர்ந்தது என்பதை தெரிந்து கொள்கிற அளவுக்கு அதில் ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்கிறார் தபி சொக்கலால் ராம்சேட் அவர்களை பார்த்து இந்த 10 பீடிகளில் உங்களுடைய கம்பெணி பீடி எது என்று உங்களால் அடையாளம் காட்ட முடியுமா ? என்று கேட்க சரி என்று சொல்லுகின்றார் மேசையின் மீது பத்து பீடிகள் வைக்கப்படுகிறது தபி சொக்கலால் ராம்சேட் ஒரு பீடியை எடுத்து இது தான் எங்களுடைய பீடி என்று சொல்லுகிறார் நீதிபதி அதை வாங்கி பார்த்து சரி என்று ஒப்புக்கொள்கிறார் அந்த நீதிபதி தான் தபி சொக்கலால் ராம் சேட் அவர்களுக்கு பீடி சக்கரவர்த்தி என்று புகழ் சூட்டியவர்
தபி சொக்கலால் ராம்சேட் அவர்களுக்கு நினைவு அஞ்சலி
No comments:
Post a Comment