பதினெண் கீழ்க்கணக்கு
இலக்கியங்களில் சான்றோர்-நாடன்
தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களான சேர சோழ
பாண்டியர் மூவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்.தொல்பழங்காலச்சிறப்பு வாய்ந்த
துறைமுகப் பட்டினமான கொற்கையில் இம்மூவரும் வாழ்ந்து வந்தனர். அரசாட்சியின்
சிறப்புக் கருதி மூவரும் தனித்தனியேப் பிரிந்து ஆட்சி செய்யக் கருதி
பிரிந்தனர்.பாண்டியன் கொற்கையிலும்,சோழன் தஞ்சையிலும், சேரன் நாஞ்சில் பகுதியிலும்
ஆட்சி செய்து வரலாயினர்.பாண்டியன் சந்திர குலத்திற்குரியவனாகவும் சோழன்
சூரியகுலத்திற்குரியவனாகவும் சேரன் அக்கினி குலத்திற்குரியவனாகவும்
போற்றப்பட்டனர்.
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை
எனும் ஐவகை நிலங்களுக்கு உரியவர்களாக இருந்து தமிழை வளர்த்தனர்.தமிழர் பண்பாடு
மற்றும் நாகரீகமும் அயல்நாடுகளில் போற்றப்படும் விதத்தில் ஏற்றுமதி. இறக்குமதி
வணிகத்தையும் வளர்த்தனர்.அந்நாளில் இருந்த நான்கு வகை வருணத்தாரான
அரசன்,அந்தணர்,வணிகர்,வேளாளர் மற்றும் பிற தொழில் செய்த பிரிவினரும் மூவேந்தர்
குலத்தின் வகைக்குள் அடங்குவர்.
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை
ஆகிய ஐவகை நிலத்தில் பனை,தென்னை,ஈச்சை மரங்கள் செழித்தோங்கியன.இம்மரத்தொழில்
புரிந்தோர்கள் சான்றோர் குலப் பிரிவிலிருந்தவர்களாவர்.விவசாயம் கண்டறியுமுன்னே
இத்தகைய மரத்தின் பயனைத் தமிழன் அறிந்திருந்தான். எவ்வாறு தமிழ் தொன்மை வாய்ந்த்தோ
அது முதல் சான்றோரின மக்களும் தமிழோடு வாழ்ந்தனர்.
இச்சேர சோழ பாண்டிய அரசர்கள் சான்றோர்
வழித்தோன்றலாவர். ஊரெங்கும் கோயில்கள்,கோபுரங்கள்,தெப்பக்குளங்கள், தேரையும்; தேரோடும்
வீதிகளையும்,அகரங்களையும்,மங்கலங்களையும் அமைத்து கல்வெட்டுக்களையும்
செப்பேடுகளையும் கண்டவர்கள் சான்றோரே.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் வழி
சான்றோர் என்ற குலத்தினர் அந்நாளில் வாழ்ந்தனரென்ற தகவல்கள் ஏராளமாகக்
கிடைக்கின்றன. அக்காலத்தில் அறிவுடையோர் சான்றோர் என்று கூறுவது சிறப்புக் கருதியாகும்.
அதேநேரம் உயர்ந்த கல்வி உடையவர்கள் மட்டுமின்றி
யுத்தம் செய்யும்
வீரமரபினரும் சான்றோரென்று அழைக்கப்பட்டனர். வீரம்,கல்வி,ஒழுக்கம்,உழைப்பு
இவைகளெல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவர்களாக இருக்க வேண்டியது சான்றோரது
பண்புகளாகும் என்பது தெளிவாகின்றது.அரசகுலச் சான்றோராகிய சேரசோழபாண்டியர்
நாடாண்டமையால் நாடன்,நாடான்,நாடார்,நாடாழ்வார்,நாடாக்கமார் என்றும்
அழைக்கப்பெற்றனர்.
சங்ககாலம் முதல்
தமிழ்நாட்டை சேர,சோழ,பாண்டியர்களாகிய சான்றோர்குலத்தினர் ஆட்சிசெய்தனர்.சான்றோர்
குலத்தவர்கள் நாடாண்ட முடியுடைய மூவேந்தர்களாவர்.
தனிச்சிறப்புடன் வாழ்ந்த தமிழனனான
சான்றோன் தனிச்சிறப்புடன் வாழ்ந்தான்.போர்க்குடி பரம்பரையிலான சான்றோருக்கு
ஆட்சிமுறை புதிதல்ல,அஞ்சாமை,ஈகை,அறிவு,ஊக்கம் என்பவைகளோடு நற்பண்புகளுடன்
விளங்கினர்.எழுத்தறிவுடன் கூடுதலாக அரசனுக்கு வேண்டிய யுத்தப் படைக்கலப் பயிற்சி,யானையேற்றம்,விற்போர்,வாட்போர்,மல்யுத்தம்
முதலியப் பயிற்சிகளிலும் சான்றோர் தலை சிறந்து விளங்கினார்.சான்றோர் சாதியினர்
கல்வி அறிவு,ஒழுக்கம் இவற்றால் நற்குடியாக;உயர்ந்த குடியாக சங்க காலத்திலும்
சங்கம் மருவிய காலத்திலும்
விளங்கினர்.திருவள்ளுவர் சான்றோர் குலத்தவருக்கு இருக்க வேண்டிய
நல்லொழுக்கங்களை தம்முடைய திருக்குறளில் கூறியுள்ளார்.
கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்
மான்வயிற்றில்
ஒள்அரி தாரம் பிறக்கும்
பெரும்கடலுள்
பல்விளை முத்தம் பிறக்கும் அறிவார் யார்
நல்ஆள் பிறக்கும் குடி -நான்மணிக்கடிகை-4
குடிப்பிறப்பு என்பது பண்பால்
அமைவதே தவிர,பிறப்பால் அமைவது அன்று நான்மணிக்கடிகை கூறுகிறது.சான்றோர் என்ற
உயர்ந்த சொல்லாட்சி, நன்னெறி கொண்ட குழுவினர் சங்க காலம் முதல் அழைக்கப்பெற்றனர்
என்பது தெளிவாகும்.
சங்க காலத்தில் குலம் இல்லை
என்று கூறுவாரது கருத்து,ஏற்புடையது அல்ல என்று கூறி குலங்கள் பல இருந்தன
என்பதற்கு ஆதாரங்களையும் பல குடிகளைச் சேர்ந்தவர்கள் பற்றிய குறிப்பையும்
தொடர்ந்து காணலாம்
குலம்
இருந்ததா............
பழந்தமிழரின் வாழ்வு முறைகளைப் பாடல்கள்
மூலம்நமக்கு அறியத் தந்தவர்கள் நமது முன்னோர்களாகிய புலவர்
பெருமக்கள்.தங்களைப்பற்றியும் தங்களைச் சார்ந்தவர்கள் பற்றியும்
கவலைப்பட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு நன்னெறிகளைப் பற்றிக் கூறுமிடத்து,
குலம் உண்டு என்பதற்குச் சான்றாக ஏலாதி
கூறும் கருத்து வலுமிக்கதாக உள்ளது.குலம் என்ற சொல்லாட்சியும்,குடி என்ற
சொல்லாட்சியும் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
‘உரையான், குலன்,
குடிமை, ஊனம் பிறரை
உரையான் பொருளொடு வாழ்வு ஆயு –உரையானாய்
பூஆதி வண்டு தேர்ந்து உண்குழலாய் ஈத்து
உண்பான்
தேவாதி தேவனாத் தேறு. -ஏலாதி;32
மேலும்
திருக்குறள்,நாலடியார்,பழமொழி,புறநானூறு,வெற்றிவேற்கை,குமரேச சதகம் உள்ளிட்ட பல
நூல்களில் பதிவாகியுள்ள சொலாட்சிகள் குலங்கள் இருந்தன என்பதை
உறுதிப்படுத்துகின்றன.
’அன்பு உடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்து அவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு -குறள்;681
’குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல்
உயர்ந்து -குறள்;957
சலம் பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி
வாழ்துமென் பார் -குறள்;956
’....நிலநலத்தால் நந்திய நெல்லே போல் தம்தம்
குலநலத்தால்
ஆகுவர் சான்றோர் ’
-நாலடியார்;179 [தொடரும்-3]
No comments:
Post a Comment