எப்போது திறப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு கோபுர வாசலை?




எப்போது திறப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு கோபுர வாசலை?

     மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுர வாயில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருப்பது பலருக்குத் தெரியாது. மற்ற மூன்று வாசல்கள் வழியாக நேரடியாக நாம் கோவிலுக்குள் செல்லலாம். ஆனால் மேற்கு வாசல் வழியாக நுழைந்தால் நேரடியாகக் கோவிலுக்குள் வர முடியாமல் ஆடி வீதி வழியாக வந்து வடக்கு அல்லது தெற்கு வாசல்கள் வழியாகத்தான் கோவிலுக்குள் செல்ல முடியும். மதுரையில் பாண்டியர்களின் ஆட்சி முடிந்து நாயக்கர் ஆட்சி தொடங்கியபோது பாண்டியரும் அவர்களின் வம்சாவழியினருமான நாடார்கள் வந்து செல்லும் பாதையான மேற்கு வாசலை மூடிவிட்டார்கள். பின்னர் அவர்கள் தேரிக்குடியிருப்பு பகுதிக்கு விரட்டப்பட்டனர். வெள்ளையர் ஆட்சி வந்தபோது மீண்டும் பல்வேறு சமூக மாற்றங்கள் நிகழ்ந்து நாடார்கள் மீண்டும் மதுரையில் குடியேறத் தொடங்கினர். 1924ல் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் மேற்கு வாசலைத் திறக்க உத்தரவிட்டார். அதனால் நாடார்கள் மீண்டும் கோவிலுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத பிற சமூகத்தினரும் அன்றைய கோவில் ரிசீவரும் சேர்ந்து மீண்டும் மேற்கு வாசலை முன்பைவிட பலமாக மூடிவிட்டனர். இன்றைய நாள் வரை இது தொடர்கிறது..
                                                                            நன்றி- நாடன் குரலோசை நாடார்-மதுரை

No comments:

Post a Comment

பண்டைய நாடார் வரலாறு!Source: Madras district gazetteers

பண்டைய நாடார் வரலாறு! Source: Madras district gazetteers #nadarhistory #nada r