200 ஆண்டுக்கால நாயக்கர் ஆட்சி சாதனைகளை முறியடித்த நாடார் மாமன்னர் காமராஜரின் ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியின் சாதனைகள்


        

 இருநூறு ஆண்டுக்காலம் விஜயநகரஆட்சி.ஆங்காங்கு நாடார்கள் முன்னர் ஆட்சி செய்தபோது கட்டிய கோயில்களில் திருப்பணி என்ற பெயரில்,மண்டபங்களைக் கட்டி அதில் தூண்களில் தங்களது ஆறடி உருவத்தையும் சுற்றிலும் தங்களது மனைவி மற்றும் துணைவியார்களது சிற்பங்களையும் அமைத்துக்கொண்டனர்.சான்றோரின நாடார்கள் தவிர அனைத்து ஜாதிக்கும் பல்வேறு உரிமைகள்.ஆனால் நாடார்கள் மட்டும் ஓட ஒட விரட்டப்பட்டனர். ஜாதி மோதல்,நூறுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளுதல்,தாங்கள் இறந்ததும் அப்பெண்களை சதித்தீயில் பொசுக்கிக் கொல்லுதல் என்று கொடும்பாவம்,அநியாயம்,ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு பேசிய விஜயநகர ஆட்சியில் காலாட்படையாளராக;எடுபிடியாக வந்து,பின்பு தங்களுடைய மன்னனுக்கு எதிரான துரோகத்தால் மதுரையை கையகப்படுத்திய நாயக்கர்கள் ஏதோ மிகவும் தமிழ்நாட்டில் மிகவும் சாதித்தது போல கருதிக்கொண்டு சில நாயக்க சமுதாயத்தைச்சேர்ந்த சில சகோதரர்கள் தமிழர்களான சான்றோரின நாடார்களை இழிவு படுத்தும் நோக்கத்தில் சில கட்டுரைகளை நம் பகுதி இணையத்தில் புகுத்தி வருகின்றனர்.சங்ககாலம் முதல் சேர,சோழ ,பாண்டியர்களாக ஆட்சி செய்த நாடாழ்வார்களின் பூர்வ புண்ய பலாபலந்தான் ஒன்பது ஆண்டுக்காலம் தமிழகத்தை ஆண்ட தென் பாண்டிய நாடார்குலக் கொழுந்து கு.காமராஜ் நாடாரின் சாதனை.எங்கள்  சக்கரவர்த்தியின் ஆற்றல் முன்பு உங்களது நாயக்கரது 200 ஆண்டுக்கால ஆட்சி ஒன்றுமே இல்லை.
மாமன்னர் காமராஜரின் பண்பும்,ஆற்றலும்
   திருமணம், மனைவி, மக்கள், குடும்பம் என்று ஆகிவிட்டால், தன்னால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தொண்டு செய்ய முடியாது என்று காமராஜர் கருதினார்.அதனால் பிரம்மச்சாரி தம்முடைய இறுதி வரை பிரமச்சாரியாகவே வாழ்ந்தார் என்பது சிறப்பியல்பாகும்.
  முதலமைச்சர் ஆனவுடன் தம்முடைய அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் காமராஜர் தனது திட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றலானார்.
அரசின் தொழிற்பேட்டைகளை ஏற்படுத்தி, அங்கே தனியார்கள் தொழில் தொடங்க வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தார், தொழிற்சாலைகளுக்கு இடவசதி, மின்சார வசதி மற்றும் ஏனைய சலுகைகளும் செய்து கொடுத்தார். இதனால் தமிழகத்தில் தொழில்வளம் பெருகியது. புதிது புதிதாக அரசின் சொந்தத் தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டன.
குமரி மாவட்டத்தில் சிற்றாறில் ஒரு அணை கட்டினால் அதனால் பொது மக்களுக்கும் , விவசாயத்துக்கும் உபயோகமாக இருக்கும் என்று முதலமைச்சர் காமராஜர் கருதினார். அதற்காக அவர் திட்டம் போட்டார். ஆனால் சிலர், ”ஆயிரக்கணக்கான ஏக்கர் ரப்பர் தோட்டங்கள் அழிந்துவிடும். திட்டத்தைக் கைவிட்டு விடுங்கள்” – என்று சொன்னார்கள்.
அரிசிக்குப் பதிலாக ரப்பரைத் தின்று உயிர் வாழ முடியுமா?” காமராஜர் கேட்டார். கேட்டவர்கள் மௌனமானார்கள். சிற்றாற்றில் அணை கட்டப்பட்டது. இதுபோல வைகை ஆற்றில் அணை கட்டப்பட்டது.
இந்தியா ஒரு விவசாய நாடு. இந்திய நாட்டில் வாழும் பெரும்பகுதி மக்கள் விவசாயத் தொழிலிலேயே ஈடுபட்டு இருக்கிறார்கள். விவசாயத் தொழில் இருந்தால் தான் பஞ்சம் , பசி, வறுமை தீரும். அதனால் காமராஜர் விவசாய வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளித்தார்.
கிராமங்கள் தோறும் மின்சார இணைப்புக்கள் வழங்கச் செய்தார். விவசாயத் தொழில் மேம்பாட்டையப் பல அணைக்கட்டுக்களைக் கட்டினார்.
கிராமந்தோறும் மின்சாரம் வழங்கிய பெருமையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதன்மை இடம் வகித்தது. நில உச்சவரம்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். கிராமங்களை நகரங்களில் இணைக்கச் சாலைகளாகப் போட்டுக் கொடுத்தார். பல தொழிற்சாலைகள் ஏற்பட வழி வகை செய்தார்.காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் தொழில்வளம் பெருகியது. நீர்வளம், நிலவளம், மின்சார வளம் என எல்லா வளமும் பெற்று, நாடும் நலமடைந்தது. மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தார்கள்.
மூன்று முறை காமராஜர் முதல் அமைச்சராக இருந்தார். மாநிலத்தில் மட்டுமின்றி மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சியே நடந்து கொண்டு இருந்தது. பண்டித ஜவஹர் லால் நேருவே நிரந்திரப் பிரதமராக இருந்து கொண்டு இருந்தார்.
தமிழக முதல்வர் காமராஜரையும், அவரது தொண்டு, தியாகம், உழைப்பு, கட்சிப்பணி யாவையும் அவர் கண்டு வந்து இருக்கிறார். புதிய இந்தியாவை உருவாக்க ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டு, அத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன.
தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கித் தர மத்திய அரசிடம் பரிந்துரைத்து தமிழகத்திற்குப் பெற்றுக் கொண்டார் காமராஜர்.
திருச்சியில் மத்திய அரசின் பெல் (BELL) நிறுவனம் காமராஜர் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. இந்தூஸ் தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, டார்ஜிலிங்கிற்குப் போக இருந்தது. அது ஊட்டியில் தொடங்க ஏற்பாடு செய்ததே பெருந்தலைவர் காமராஜர்தான்.
தமிழக அரசின் தொழில்கள் தனியார்கள் தொடங்கிய பல்வேறு தொழில்கள், இவைகளோடு மத்திய அரசால் தமிழகத்தில் தொடங்கப்பட்ட பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை திருச்சி நவில்பட்டு துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி டாங்க் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரித் தொழிற்கூடம், சேலம் ஸ்டீல் தொழிற்சாலைஇப்படித் தமிழகத்தில் ஏராளமான தொழில்கள் தொடங்கப்பட்டு, மக்களுக்கு வேலை வாய்ப்புக்களும் மக்கள் வாழ்வில் சிறிது பொருளாதார உயர்வும் ஏற்படலாயிற்று.
 காமராஜர் 12 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து இருக்கிறார். 9 ஆண்டுகள் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தியிருக்கிறார்.
பின்னர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இரண்டரை ஆண்டுகாலம் இருந்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் இருக்கிறார்.
 காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்து தொண்டராக இருந்த காலந்தொட்டுக் கடைசிக் காலம் வரை காமராஜர், கதர் நான்கு முழவேட்டி, அரைக்கை சட்டை- ஒரு துண்டு, இரண்டு தோல் செருப்புக்கள் இதுதான் அவரது சொத்துக்கள்.
இந்த எளிய கதர் உடையை உடுத்திக் கொண்டே காமராஜர், சோவியத் நாடு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணங்கள் செய்து விட்டுத் தமிழகம் திரும்பினார்.
அவர் அகில இந்தியாவிலும், எல்லா இடங்களுக்கும் சென்று, காங்கிரஸ் பேரியக்கத்துக்காகப் பிரச்சாரம் செய்து இருக்கிறார். எங்கும் அவர் காமராஜரை வடக்கே உள்ளவர்கள்காலாகாந்தி கருப்புக் காந்திஎன்றே கூறி மதித்துப் போற்றி வந்தார்கள்.
கிராமங்கள் நிறைந்த தமிழ்நாட்டில், விவசாயமே முக்கியத் தொழில். விவசாயம் விருத்தி அடைந்தால் தான், உணவுப் பொருட்கள் உற்பத்தி பெருகும். அப்படி ஆனால்தான் பஞ்சம், பசி மறையும். சும்மா கிடக்கும் நிலங்களை விவசாய நிலமாக்க வேண்டும். அதற்குத் தண்ணீர் வேண்டும். கிராமங்கள் தோறும் மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று சொல்லியாகிவிட்டது. சொன்னபடி செய்யவேண்டாமா?
தண்ணீர் தட்டுப்பாட்டையும், மின் தட்டுப்பாட்டையும் எப்படித் தீர்த்து வைப்பது? வழி வகை கண்டார். திட்டங்கள் தீட்டினார். செயலிற் காட்டினார் காமராஜர்.
அப்போதைய அரசின் வருமானமோ ரூபாய் 45 கோடி மட்டும். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தொகை மட்டும் ரூபாய் 95 கோடி.
பற்பல கோடி ரூபாய்கள் செலவு செய்து மின் திட்டங்களைக் காமராஜர் தொடங்கினார். அவைகள் இதோ;-
1. 26 கோடி ரூபாயில் குடிநீர்மின் திட்டம்.
2. 10 கோடி ரூபாயில் பெரியாறு மின்திட்டம்.
3. 8 கோடி ரூபாயில் கும்பார்அமராவதி மின் திட்டம்.
4. 12 கோடி ரூபாய் செலவில், 75,000 கிலோ வாட் மின்சாரம் உபரியாகக் கிடைக்க வழி செய்த மேட்டூர் கீழ்நிலை நீர் செல்வழித் திட்டம்.
பாபநாசத்திலும், பைக்காராவிலும் மேலும் இரு சிறு மின்திட்டங்களைச் செயலற்படுத்தி 7500 கிலோ வாட் மின்சாரம், மோயார் திட்டத்திற்காகச்செலவு சில கோடி ரூபாய்கள்.
  இவை அனைத்தும் காமராஜர் தனது ஆட்சிக்காலத்தில், திட்டம் போட்டுச் செய்த்தினால் தான் மின்சார உற்பத்தி அதிகமாயிற்று. சிறு விவசாயிகளுக்கும் பம்ப்செட் மூலம் தண்ணீர் இறைக்க இலவச மின்சாரம் கிடைத்தது.
    1958-1959 முடிய தமிழ்நாட்டில் மின்சார இணைப்பில் மொத்தம் ஈடுபடுத்தப்பட்ட மூலதனம் ரூபாய் 95 கோடியாகும். கிராமப்புற பகுதிகளுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்லும் திட்டத்தில் காமராஜர் ஆட்சி இந்தியாவிலேயே முதலிடம் வகித்தது. 13,300 கிராமங்கள் மின்சார வசதிகள் பெற்றன.
சென்னை மின்சார நிலையம் விஸ்தரிக்கப்பட்டது. அதற்காக செலவு 271 கோடி ரூபாயில். இதனால் ஒரு லட்சம் கிலோ வாட் மின்சக்தி உற்பத்தியானது.
இவ்வாறு காமராஜர் மின் உற்பத்தியைப் பெருக்கினார்.
விவசாயமும், உரம் உற்பத்தியும் பெருக, காமராஜர் பற்பல அணைகளைக் கட்டினார். கரிகாலன் கட்டியதுதான் கல்லணை என்றும், நாங்கள் பிற்காலத்தில் கட்டியதுதான் மேட்டூர் அணை என்றும் பெருமைப் பட்டுக்கொண்டிருந்தோம். இதோ கர்மவீர்ர் காமராஜர் கட்டிய அணைகளையும் பாரும் இந்த அணைக்கட்டுகளால் அதிகமாக எத்தனை ஏக்கர்களில் விவசாயம் நடந்தன என்பதையும் சற்று எண்ணிப்பாருங்கள். காமராஜரின் சாதனைகள் புரியும்.
காமராஜர் தனது ஆட்சிக்காலத்தில் சிறிய மற்றும் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றைத் திட்டமிட்டு உருவாக்கினார். இவைகளால் ஆயிரக்கண்க்கான ஏக்கர் நிலங்கள் தண்ணீர் வசதி பெற்று விவசாய நிலங்களாக மாறின.
 கட்டிய ணைக்கட்டுக்கள்.
1. கீழ்பவானி
2. மணிமுத்தாறு
3. காவிரி டெல்டா
4. ஆரணியாறு
5. வைகை நீர்த்தேக்கம்
6. அமராவதி (அணை)
7. சாத்தனூர் (டாம்)
8. கிருஷ்ணகிரி
9. புள்ளம்பாடி
10. வீடூர் அணைத்தேக்கம்
11. பரம்பிக்குளம்
12. நெய்யாறுபோன்றவைகளாகும்.
இவற்றில் கீழ்பவானி திட்டத்துக்கு ரூபாய் 10 கோடி செலவிடபட்டது. 27,000 ஏக்கரிலே புதிதாக விவசாயம் நடந்தது.
மணிமுத்தாறு அணைக்கட்டினால் 20,000 ஏக்கர் நிலங்கள் பயன் அடைந்தன. சேலம் மேட்டூர் கால்வாய் மூலம் 45,000 ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசன வசதிகள் பெற்றன. பரம்பிக்குளம், ஆரணியாறு திட்டத்துக்கு ரூபாய் முப்பது கோடி ஒதுக்கப்பட்டது.
விவசாய உற்பத்தி பெருக விவசாயிகளுக்குக் கிணறுகள் வெட்ட, ஆயில் எஞ்சின்கள் வாங்க, எலெக்ட்ரிக் பம்பு செட்டுகள் போட அரசாங்கம் தவணை முறையில் கடன்கள் வழங்கியது. இலவச மின்சாரமும் கொடுத்தது.
உபரியாக ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் விளை நிலங்களாக்கப்பட்டன. உணவுப் பொருட்களின் உற்பத்திகள் அதிகரித்தன. விவசாயம் செய்யத் தண்ணீர் வேண்டுமே. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து பல்வேறு சிறிய, பெரிய மின்சார உற்பத்தி நிலையங்கள் உண்டாக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் தொழில்கள் முன்னேறக் காமராசர் செய்த சாதனைகள் என்னென்ன? இதோ நீண்டதொரு பட்டியல். இதில் மாநில மற்றும் மத்தியத் தொழிற்சாலைகளும் அடங்கும்.
1. 159 நூல் நூற்பு ஆலைகள்
2. 30 லட்சம் நூற்புக் கதர்கள்
3. 8000 துணி நூற்புப் பாவுகள்
4. கிண்டியில் மாபெரும் தொழிற்பேட்டை
5. சிமெண்ட் ஆலைகள்
6. உலைக்கூட உருளைச் செங்கல் ஆலைகள்
7. ரப்பர் தொழிற்சாலைகள்
8. காகித உற்பத்தி ஆலைகள்
9. கார் உற்பத்தித் தொழிற்சாலைகள்
10. கார்களின் உதிரிபாக உற்பத்தி அகங்கள்
11. சைக்கிள் தொழிற்சாலை மற்றும் தானியங்கி ஈருளிகள்
12. பாதை கனமாக்கும் என்ஞ்சின்கள்
13. தட்டச்சுப் பொறிகள்
14. களைக்குப் பொறிகள்
15. காஸ்டிக் சோடாகந்தக அமிலம்
16. நெய்வேலி உரத்தொழிற்சாலை (உற்பத்தி 70000 டன்கள்)
17. டிரான்ஸ்பார்மர்கள்
18. ஸ்விட்ச் கியர்கள்
19. எலெக்ட்ரிக் கேபிள்கள்
20. மீட்டர் கருவிகள்
21. மின்தடைக்கருவிகள்
22. வானொலிப் பெட்டிகள்
23. சுழல்மின் விசிறிகள்
24. அலுமினிய உற்பத்தி உலைகள்
25. நெய்வேலி நிலக்கரிச்சுரங்கம்
26. ஒளிப் படச்சுருள்கள்
27. மருத்துவ அறுவைச்சிகிச்சைக் கருவிகள்
28. டெலிபிரிண்டர்கள்
29. .சி.எப். தொடர்வண்டிப் பெட்டிகள்
30. பாரவுந்து வாகனங்கள்
31. பெல் உயரழுத்த கொதிகலன்கள் (BHEL)
32. சிறு போர்முனைக் கருவிகள் (துப்பாக்கித் தொழிற்சாலை)
33. மாக்னசைட்
34. சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள்
35. ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை.
இவ்வாறு எண்ணிலடங்காத தொழிற்சாலைகள் காமராஜர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டன. தொழில் வளம் பெருகிற்று. வேலையல்லாத திண்டாட்டங்கள் சற்று விலகிற்று.
தனியார் முதலீடுகள் செய்து தமிழகத்தில் தொழில்கள் தொடங்கவும் காமராஜர் ஆட்சியில், தொழிற்பேட்டைகளில் வாடகைக்குக் கூடங்கள் வழங்கப்பட்டன. நகரின் எல்லைகளில், தொழிற்சாலைகளுக்கு, உரிய நிலங்களும், மின்சார வசதி, தண்ணீர் வசதிகளும் செய்து தரப்பட்டன.
காமராஜர் செய்த கல்விச் சாதனைகளைக் கண்டு இந்தியாவிலே, ஏன் உலக நாடுகளே வியந்து பாராட்டின. எனவே அவரைத் தமிழ்நாட்டில் காமராஜரது ஆட்சிக் காலத்தில் கல்வி முன்னேறியது.
அடுத்துத் தொழில்களின் முன்னேற்றத்தைப் பார்த்தோம். அத்துடனே, விவசாயமும் ஒரு தொழில்தானே, விவசாய முன்னேற்றத்திற்குக் காமராஜர் செய்த சாதனைகள் என்னென்ன என்று கண்டோம். விவசாயத்திற்குத் தண்ணீரும் வேண்டும். மின்சாரமும் வேண்டும். தண்ணீருக்காக அணைகளைக் கட்டினார்.
மின்சாரத்திற்காக எத்தனையோ சிறிய, பெரிய மின் உற்பத்தி நிலையங்களை உண்டாக்கினார். விவசாயம் பெருககிற்று. மின்சாரம் கிராமங்களுக்கும் சென்றடைந்தது.
காமராஜர் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில், கல்விக்காக அவர் என்னென்ன சாதனைகள் செய்தார் என்பதை இனிக் காண்போம்.
காமராஜர் ஆட்சிக்கால்த்தில்தான் எல்லாச் சிற்றூர்களிலும் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. பேரூர்களுக்கு எல்லாம் உயர்நிலைப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்பட்ட கிராமங்களில் கூட உயர்நிலைப் பள்ளிகள் உருவாகின.
16 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் 16 லட்சம் குழந்தைகள் படிக்கலானார்கள். அதன் பின்னர் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. ஏறத்தாழ 48 லட்சம் பிள்ளைகள் தமிழகத்தில் கல்வி கற்கலானார்கள்.
30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் 16 லட்சம் மாணவமாணவிகள் பகல் உணவு உண்டார்கள் என்று அன்றைய பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த திரு. நெ.து. சுந்தர வடிவேலு கூறுகிறார்.
காமராஜர் முதலமைச்சராகப் பதவி ஏற்ற போது 3 இலட்சத்து 86 ஆயிரமாகயிருந்த உயர்நிலைப்பள்ளிகள், அவரது முயற்சிகளால் 13 லட்சமாக உயர்ந்தது. தொழிற் கல்விக் கூடங்களும் மாவட்டம் தோறும் தொடங்கப்பட்டன. தொழில்கள் பெருக வேண்டுமானால் தொழிற் கல்வியும் அத்தியாவசியமன்றோ.
இலவசக் கல்வி, மதிய உணவு, இலவசப் பாடப்புத்தகங்கள் என்றெல்லாம் அறிமுகப்படுத்திய காமராஜர், தனது ஆட்சிக் காலத்திலே தான் பள்ளிப் பிள்ளைகளிடையே சீருடையை அணிந்து எல்லாக் குழந்தைகளும் சமம் என்பதை நிரூபித்துக் காட்டினார்.
பள்ளிகளில் அந்தக் காலத்தில் பணக்கார்கள் வீட்டுப் பிள்ளைகள் ஆடம்பரமான உடைகளில் வந்தார்கள். ஏழை, எளிய பிள்ளைகள் கிழிசல் சட்டைகளைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் வந்தார்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளைப்பார்த்தால், யார் யார் பணக்காரர்கள் வீட்டுப்பிள்ளைகள், யார் யார் ஏழைகள் வீட்டுப் பிள்ளைகள் என்று எளிதில் அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வேறுபாட்டை, வித்தியாசத்தை பூண்டோடு களைந்து எறியவே காமராஜர் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தைத் தமிழகம் முழுதும் அமுல் படுத்தினார். இந்தத் திட்டத்தினால் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளிடம் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்டன. அந்தச் சீருடைத்திட்டம் இன்னும் தமிழகத்தில் எல்லாப் பள்ளிகளிலும் இருக்கக் காணலாம்.
இன்று கூட எத்தனையோ, டாக்டர்கள், வழிக்கறிஞர்கள், என்ஜியர்கள், கலெக்டர்கள் மற்றும் காவல் துறைப் பெரிய அதிகாரிகள் எல்லாம், ”நாங்கள் பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த கல்வித் திட்டங்களால் படித்து, வேலைவாய்ப்புப் பெற்று உயர்ந்த நிலையில் இருக்கிறோம்” – என்று நன்றியுடன் சொல்லிக் கேட்கலாம்.
கண்ணுடையோர் என்பார் கற்றோர்முகத்திரண்டு
புண்ணுடையோர் கல்லாதவர்
- என்றார் திருவள்ளுவர். கல்வி பெற்றோரே கண்ணுடையவர்கள், மற்றவர்கள் முகத்திரண்டு புண்ணுடையவர்கள் என்பதே வள்ளுவர் கருத்து.
தமிழகத்தில், பட்டி தொட்டிகள், சிற்றூர்கள், பேரூர்கள், நகரங்கள், பட்டணங்களில் எல்லாம் எல்லோர்க்கும் கல்வியை அளித்த பெருந்தலைவர் காமராஜரைத் தமிழகத்தில், ”கல்விக் கண் திறந்து வைத்தவர்” – என்று சொல்வதிலே தவறேதுமில்லையல்லவா.
இந்தியாவில் அன்று மேற்கு வங்காளமும், கேரளாவும்தான் கலவியில் சிறந்து விளங்கியது. அந்த அளவிற்குத் திட்டங்கள் தீட்டித் தமிழகத்தில் கல்வியை எங்கும் பரப்பியவர் காமராஜரே என்றால் அது மிகையாகாது.
மதிய உணவுகள் மாணவமாணவியர்களுக்குப் போகும் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் அந்தந்த மாவட்டத்தில் இருந்த பணக்காரர்களிடம் நன்கொடைகள் வசூலித்தே போடப்பட்டது. பெரும்பாலோனோர்,
மண்டினி ஞாலத்து மக்கட்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே
- என்று உதவிடத்தான் செய்தார்கள். அதிலும் பள்ளியில் படிக்கும் ஏழைப் பிள்ளைகளுக்கு உணவுகள் வழங்குவதில் அவர்கள் தர்ம சிந்தனையோடு தாராளமாக்க் கொடுத்தும் உதவி செய்தார்கள்.
தென்மாவட்டங்களில் சிலபல ஊர்களில், அறுவடை காலங்களில் இத்திட்டத்திற்காக ஒரு மரக்கால், இரண்டு மரக்கால் என்றும் அளந்து கொடுத்தார்கள். எட்டயபுரம் மகாராஜா கூட இத்திட்டத்திற்கு உதவி செய்தார்.
மழைக்காலம் அல்லது பஞ்ச காலம் என்று வந்துவிட்டால், கொடுத்தவர்கள் நிறுத்திக்கொண்டார்கள். இதனைக் கருத்தில் கொண்ட பெருந்தலைவர் காமராஜர், எக்காலத்திலும் மதிய உணவு கிடைக்க அரசாங்கமே வழிவகை செய்யும்படி உத்தரவிட்டார்.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளும் மதிய உணவு தங்கு தடையின்றி வழங்கப்பட்டது. கல்விக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகையில் இத்திட்டத்திற்காகவும் சேர்த்து அதிகப் பணம் ஒதுக்கிட அவர் ஏற்பாடு செய்தார்.
அந்தந்த திட்டத்தை அமுல்படுத்தும்போது அவைகளுக்குச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைக் காமராஜர் என்றும் கலந்து ஆலோசிக்கத் தவறியதே இல்லை. அவர்கள் அரசாங்க ஊழியர்களே என்றாலும் கூட அவர்களுக்குத் தக்க மரியாதைகளைக் கொடுத்தார்.
தன் கூடவே முதலமைச்சர் காரிலேயே அவர்களைப் பற்பல ஊர்களுக்கு உடன் அழைத்தும் சென்றார். அதிகாரிகளுக்கு இந்த நடவடிக்கை அதிசயமாக, ஆச்சர்யமாக, அதிர்ச்சியாகக்கூட இருந்தது எனலாம்.
காரிலே போகும்போது அவர்களை அந்தத் திட்டம் பற்றிய பல் வேறு பிரச்சினைகளையும், அவைகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளையும் காமராஜர் சொல்லிக்கொண்டே போவார்.
இப்படித்தான் அன்று பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த திரு. நெ.து. சுந்தர வடிவேலுவைக் காமராஜர் பலமுறை தன்னோடு, தனது காரிலேயே அழைத்துச் சென்றிருக்கிறார்.
குற்றம், குறைகள் சற்றும் நிகழ்ந்து விடாதபடி கண்காணித்துக் கொள்வதிலே காமராஜர் கண்ணும் கருத்துமாய் இருந்தார். பொற்கால ஆட்சியினைத் தமிழ்நாட்டில் காமராஜர் புகுத்திப் புகழ் சேர்த்துக் கொண்டார். கல்விக்காகவும், தமிழகத்தில் கல்வி முன்னேற்றத்திற்காகவும் காமராஜர் கையாண்ட கொள்கைகள், நடைமுறைப்படுத்திய திட்டங்கள் எண்ணிலடங்காதவைகளாகும்.
1938-39 ஆம் ஆண்டுக்கு அப்போதிருந்த அரசு, தமிழகம் முழுவதிற்கும் கல்விக்காகச் செலவிடப்பட்ட தொகை ரூபாய் 2 கோடியே 62 லட்சம் ஆகும். ஐந்தாண்டுத் திட்டத் தொடக்கக் காலத்தில் அது ரூபாய் 10 கோடியே 57 லட்சமாகும்.
1960-61 ஆம் ஆண்டில் கல்விக்காக ரூபாய் 15 கோடியே 68 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது நடந்து காமராஜர் முதலமைச்சர் பொறுப்பேற்று ஆண்டிருந்த காலகட்டமேயாகும்.
15,303 ஆரம்பப்பள்ளிகள் இயங்கி வந்த தமிழகத்தில், 26,700 ஆரம்பப் பள்ளிகளாக் காமராஜர் ஆட்சியில் உயர்ந்தன. பள்ளிக் கூடமில்லாத கிராமங்களே தமிழக்த்தில் இருக்கக்கூடாது என்று பெருந்தலைவர் காமராஜர் கருதினார்.
தமிழ்நாட்டில் முன்னூறும் அதற்கும் மேலும் மக்கள் தொகையுள்ள எல்லாக் கிராமங்களிலும், ஒரு மைல் சுற்றளவிற்குள் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தினார் காமராஜர்.
18 லட்சத்து 50 ஆயிரம் சிறுவர் சிறுமிகள் படித்துக் கொண்டிருந்தார்கள். அன்றைய தமிழகத்தில் அந்த நிலைமையை மாற்றி 34 லட்சம் பிள்ளைகள் படிக்கும் வாய்ப்பினைக் காமராஜர் உண்டாக்கினார். பள்ளி வேலை நாட்கள் எல்லாவற்றிலும் நண்பகல் உணவு படிக்கும் குழந்தைகளுக்குக் காமராஜர் வழங்கச் செய்தார்.
கிழிந்து, நைந்து போன ஆடைகளோடு என் குழந்தையை எப்படிப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவேன்” – என்று ஏங்கி, ஏழைத் தாய்மார்கள் கண்ணீர் வடித்தார்கள். அவர்களது கண்ணீரைத் துடைத்துக் காமராஜர், எல்லாப் பிள்ளைகளுக்கும் இலவசச் சீருடைகள் வழங்கச் செய்தார்.
பள்ளிச் சீரமைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து காமராஜர் அதை அமுல்படுத்தினார். அவர் தொடங்கி வைத்த பள்ளிச் சீரமைப்புத் திட்டத்தின் பயனாகப் பள்ளிகளுக்குப் பொதுமக்கள் நன்கொடையாக அளித்த பொருள்களின் மதிப்பு ரூபாய் 7 கோடியாக வளர்ந்தது.
கல்வித் துறையில் காமராஜர் கையாண்ட திட்டங்களையும், செயற்பாடுகளை
யும் கண்டு, அன்றைய இந்திய பிரதமர், பண்டித ஜவர்கஹர்லால் நேருவே காமராஜரை வாயாரப் பாராட்டினார்.
பெரியார் .வெ.ரா அவர்கள் காமராஜரைப்பச்சைத் தமிழர்” – என்று பாராட்டினார. காமராஜரின் கல்விச் சாதனைகளை, சேர, சோழ, பாண்டிய மன்னர்களோ, அதன்பின்னர் தமிழகத்தை ஆட்சி செய்தவர்களோ, ஆங்கிலேயர்களோ எவருமே செய்தது இல்லை என்றார். ”இன்னும் பத்தாண்டுகள் காமராஜர் ஆட்சி நீடித்தால் தமிழகத்தில் படிக்காதவர்களே இல்லை என்ற நிலை நிச்சயமாக உருவாகும்.” என்றும் அவர் சொன்னார்.
காமராஜர் கல்விச்சாதனைகள் இன்னும் எவைஎவை என்றுதானே கேட்கத் தோன்றுகிறது. இதோ காமராஜர் செய்திட்ட ஏனைய கல்விச் சாதனைகளைப் பாருங்கள்.
471 உயர்நிலைப்பள்ளிகளே இருந்த தமிழ்நாட்டில் 1361 உயர்நிலைப் பள்ளிகளை உண்டாக்கினார் காமராஜர்.
கல்லூரிகளின் எண்ணிக்கையோ 28 ஆக இருந்தது. அவைகள் காமராஜர் ஆட்சிக்காலத்தில் 50க்கு மேலாக உயர்ந்தன. 6 பயிற்சிக் கல்லூரிகள் இருந்த தமழ்நாட்டில் 17 பயிற்சிக் கல்லூரிகளாக ஆக்கினார் காமராஜர். மேலும் 3 உடற்பயிற்சிக் கல்லூரிகளைத் தோற்றுவித்தவரும் காமராஜரே.
காமராஜரே முதன்முதலில் தமிழிலே பாடப்புத்தகங்கள் வெளியிட வழி செய்தவர். கோவை அரசினர் கலைக் கல்லூரியிலும் மூன்று ஆண்டு பட்டப்படிப்பில் அரசியல் பாடங்களைத் தமிழில் கற்றுத் தருவதற்கும் காமராஜரே வழிவகைகள் செய்தார்.
ஏழை, எளிய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்கள் வழங்கினார். தொழில்நுட்பம், கல்வித்துறை, மருத்துவத்துறை, வேளாண்மைத்துறை, காலநடைத் துறை, அரிசன நலத்துறை ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் வழங்கி, இத்துறையில் சிறந்த மாணவர்களை உருவாக்கி நாட்டிற்கு அவர்களை வழங்கினார் காமராஜர்.
அறிவு வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதன் முதலாகப் பொது நூலகச் சட்டத்தை ஏற்படுத்தி, 454 கிளை நூlலங்கங்களைக் காமராஜர் அமைத்தார். எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மத்திய நூலகங்கள் இவ்வாறு ஏற்பட்டன.
படிக்காத காமராஜர் எப்படித் தமிழ்நாட்டில் படித்தவர்களை அதிகமாக்கினார் என்பது இப்போது தெள்ளெனத் தெரிகிறதல்லவா. அவரைப் படிக்காத மேதை என்பார்கள். ஆனால் காமராஜர் உண்மையிலே ஒரு மேதை ஆவார்.

1 comment:

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு