சங்ககாலத்திலிருந்து தாமிரபரணி ஆற்றங்கரை வெற்றிலைகளின் தனித்தன்மைக்கு மருத்துவக்குணம் காரம் சுவை உண்டு,. #ஆத்தூர், #ராஜபதி, #மரந்தலை, #வெள்ளக்கோவில், #சுகந்தலை, #மேலஆத்தூர், #சேர்ந்தபூமங்கலம், #வாழவல்லான், #கொற்கை, #உமரிக்காடு, #முக்காணி ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் இந்த வெற்றிலை விவசாயம் நடைபெற்றுவருகின்றது.
ஆத்தூர் நாட்டுக்கொடி வெற்றிலையின் தனிச்சிறப்பு அதன் நீண்ட இலைக்காம்பு ஆகும். இது புத்துணர்ச்சியைத் தக்கவைத்து,. கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் என்றும் கூறுகின்றனர். வெற்றிலைகளில் புரதம், கொழுப்பு நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் ஏராளமாக உள்ளன.
அனைத்துத் திருக்கோயில்கள் வழிபாட்டிலுல் வெற்றிலை பாக்கு இருக்கும். ஆத்தூர் வெற்றிலை புவிசார் குறியீடு (GI) பெற்றுள்ளது.
கோயில்களும் கல்வெட்டுகளும் முற்கால ஆவணத் தொகுப்பாக உள்ளது.
அருள்மிகு #திருச்செந்தூர் அருள்மிகு #சுப்பிரமணியசுவாமி கோயிலில் காணப்படும். #இரண்டாம்_வரகுணமாற_பாண்டியன் கி.பி.875 கல்வெட்டும் வழிபாட்டிற்குத் தேவையான , வெற்றிலை, பாக்கு பற்றி குறிப்பிடுகிறது.
A.R No 26 of 1912
59…….ஆஇரத்திருநூற்றுருபது பற்று வெற்றிலைக்கு ஒருகாசா
60. கவும் அடக்காய்……….
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர்.
கல்வெட்டுகளில் இறைவன் ' #சோமதேவரானதென்திரிபுவனம்உடையார். ' #சோமசுந்தரி 'அம்மன் அழைக்கப்படுகின்றார்
பள்ளி கொண்ட பெருமாள் #இராசராசசோழன் காலத்தில் #விண்ணகர்_பள்ளிகொண்டருளியதேவர் என்றும் #சுந்தரபாண்டியன் காலத்தில் இப்பெருமாள் கோயில் ' #திருநாராயண_விண்ணகர் ' என்றும் அழைத்துள்ளனர். .. கோயிலின் நுழை வாயிலில் உள்ள கல்வெட்டு இவ்வாயிலின் பெயரைக் குறிக்கின்றது .
இராசராசனின் சோழ ஆட்சிக் காலத்தில் இவ்வூர் படைத் தளமாக இருந்தது . ' அருமொழிதேவ தெரிந்த பரிவாரங்கள் ' என்ற படைப்பிரிவு இருந்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன . #சோழபாண்டியர் களின் காலத்திலும் இது நிகழ்ந்தன என்பதை ' சுந்தர சோழ பாண்டிய தெரிந்த பரிவாரங்கள் ' என்ற கல்வெட்டுத் தொடரால் அறியலாம் .
மேலும் ' #சோமநாதர்_மரக்கால் ' இறைவன் பெயர் தாங்கிய முகத்தல் அளவை முறை இருந்தது என்றும் அறியமுடிகிறது. .
இச்சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலமாக ’’வெற்றிலை’’ பற்றி குறிப்பு உள்ளன..அவரது பிரதிநிதியாக #சடையவர்மன்_சுந்தரசோழ_பாண்டியன் கி.பி.1018 - 1040 ஆட்சிக்காலத்திலும்..
A.R No 393 of 1929-30 ‘’
16…..பாக்குக்கும் வெற்றிலை யெண்பதுக்கும்…. ‘’
A.R No 417 of 1929-30
22…..பாக்கும் வெற்றிலைக்கும்…………..’’
கல்வெட்டுக்களில் கரியமுது செய்வதற்கான காய்கறிகள் , அமுதுபடிக்கான பருப்பு, உப்பு,புளி, மிளகு, கறி, நெய், காயம், பச்சபயறு , சர்க்கரை. சாத்துப்படிக்கான எண்ணெய், தேன், நெல்லி, மஞ்சள், சந்தனம்,திருப்பள்ளி தாமம், திருமாலை,பரிவட்டம், துணி, இளநீர், கற்பூரம், பாக்கு,வெற்றிலை, பற்றியும் காணமுடிகிறது.
#PandiarKingdom
#SolarKingdom
முனைவர் தவசிமுத்து மாறன்
.
No comments:
Post a Comment