உவெசா
தெரியாத சில வரலாறு பகுதிகள்.
உவெசா பெயரின் விரிவாக்கம் என்பது
“உத்தமதான புரம் வெங்கட சுப்பய்யர் சாமிநாத அய்யர்” அதாவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மாதிரிங்க.
இதில் வரும் “உத்தமதான புரம்” என்பது தஞ்சையை ஆண்ட தெலுங்கு நாயக்கர்களால் தானமாக கொடுக்கபட்ட ஊர்.
ஒருநாள் இந்த தஞ்சை ஆண்ட தெலுங்கு நாயக்கன் ஒருவன் பயணம் செல்லும் வழியில் களைப்புக்காக ஒரு வீட்டு திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை பாக்கு போட்டு கொண்டிருந்தானாம். அந்த வீட்டு திண்ணை ஒரு பிராமணன் வீடாம். நீ என் வீட்டு திண்ணையில் உட்கார்ந்ததால் தீட்டு பட்டுவிட்டது என அந்த பிராமணன் சொன்னானாம். உடனே அந்த முட்டாள் தஞ்சை நாயக்கன் இதற்கு என்ன பரிகாரம் என கேட்டானாம். அந்த பிராமணன் பரிகாரமாக 48 பிராமணனுக்கு வீடுகட்டி கொடுத்து அந்த பகுதி இடங்களையும் தானமாக கொடுத்தால் தீட்டு கழிந்துவிடும் என சொன்னானாம்.
அந்த பிராமண அடிமை தஞ்சை நாயக்கன் கொடுத்த இடம்தான் அந்த உத்தமதான புரமாம். அந்த பிராமணன் யாருன்னா அதுதான் இந்த உவெசாவின் வம்சாவளி பூட்டனாம். இது உவெசா வின் “என் சரித்திரம்” என்ற நூலில் எழுதிருக்கார்.
அடுத்து உவெசா பற்றி
தென் மாவட்டம் கமுதியில் 1897ல் ஒரு கோவில் நுழைவு போராட்டம் நடக்கிறது. அந்த போராட்டத்தின் விளைவாக கோவில் நுழைவு கூடாது என 1898ல் மதுரை கீழமை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு ஒரு வருடமாக நடக்கிறது. அந்த வழக்கின் நீதிபதி D.வரதராசன் தீர்பின் சாட்சியாக அந்த மக்களின் ஆலைய நுழைவு சரிதான் என ஆதரவாக 23 பிராமணர்கள் சாட்சியும் இல்லை அந்த மக்களுக்கு அலைய நுழைவு கூடாது என 38 பிராமணர்களும் சாட்சி அளித்துள்ளனர்.
அந்த மக்கள் ஆலையத்திற்குள் அனுமதிக்க கூடாது என சாட்சியளித்த 38 பிராமணர்களுள் ஒருவர் இந்த உவெ சாமிநாத அய்யர்தாங்க…
தமிழ் தாத்தா, முத்தமிழ் அறிஞர் என இப்படி பலருக்கு பட்டங்களும் வாழ்வும் கொடுத்தது தமிழ் மொழி. அந்த அந்த காலகட்டங்களில் தங்கள் வாழ்வாதாரத்திற்கு ஏடுகள் சேர்திருக்கலாம், திருக்குறளுக்கு விளக்கம் எழுதிருக்கலாம் அதனால் தமிழுக்கு அவர்கள்தான் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும்.
ராம் பாலையா
பரப்பாடி.
No comments:
Post a Comment