அச்சம்பாடு கல்வெட்டு .கிபி 1639,
திருமலைநாயக்கர் மன்னர் காலத்தில் [1623-1659] நெல்லை பொறுப்பு ஆட்சியாளராக வடமலையப்பப் பிள்ளை இருந்தபோது, இக்கல்வெட்டு சாசனம் பொறிக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் கோயிலுக்கு வழிபாட்டுக்கு மாநியம் குறித்தும், மற்றும் வரி வசூல் குறித்த செய்திகள் பொறித்து வைக்கப்பட்ட சாசனமாகும்.
முன்புறம்
1. சகாத்தம் கசூருள சாய ந் மெ
2. மற்செல்லாநின்ற கொல்லம்
3. அளௌயக வரு சர்வ சித்தி வரு கார்த்திகை
4. க மீ யக உ அபர பக்கிசத்து துரதிகை
5. கயும் சுக்கிர வாரமும் அமுதயாக
6. மும் தியா....கரணமும் பெற்ற மிருக
7. சீரிடத்து நாள் செய்த உத
8. க பூற்வ தானப் பிறமாணப்பட்
9. டையமாவது திருவழுதி வளநாட்டுச்
10. சீவைகு[ந்தமு]டைய சுவாமி கயி
11. லாய நாதர்...காலசந்தி
12. ..........திரௌ
13. மாலையன்.......கும்படிக்கு
14. சுவாமி கயிலாயனாதர் கோவில்ச்
15. சீ பண்டார காரியஞ் செய்வார்களு
16. க்கு மானவீர வளநட்டுத் தென் பற்றா
17. ன குலசேகரன் பட்டிண மாகாணி
18. சோனையுகந்தான் பட்டணத்து உத
19. ய மாத்தாண்டன் பெருந்தெருவில்
20. குமாரசுவாமியா பிள்ளை மூப்பனா
21. ரும் பள்ளக்குறிச்சி முதலி நயினாப்பிள்
22. ளையும் அரசி மீண்டான் கிணறு மாத்
23. தாண்ட பிள்ளையும் கூத்தாடி நல்
24. லூரிலிருக்கும் கரையாளனும்
25. வீர மாத்தாண்ட நல்லூர் அடை
26. க்கலங்காத்தா பிள்ளையும் மற்று
27. ம் உண்டான நாட்டாரும் குட்டம்
28. சந்திராதிச்ச நாடானும் கொம்ம
29. டிக்கோட்டை திருப்பாப்பு நாடா
30. னும் படுகைப்பற்று அருதகுட்டி
31. ஆதிச்ச நாடானும் மாதவன் குறி
32. ச்சி திருக்கைவேலாதிச்ச நாடா
33. னும் பெரிய கண்டன் வடலி வீர
34. மாத்தாண்ட நாடானும் மற்றும் உ
35. ண்டான நாடாக்கலூம்மோம் நிறை
36. றவற நிறைந்து குறைவறக்கூடிக்
37. கிறைய உதகபூர்வ தானப் பிறமா
38. ணப் பட்டய மெழுதிக்குடுத்த....
39. .....தில் நான்கெல்லைக் குட்பட்ட
40. குடியும் கீழ் நோக்கின கிணறும்
41. மேல்நோக்கின மரமும் நத்தமும்
42. நத்தைப்பாடும் தேன்படு பொது
43. ம்பும் மீன்படு பள்ளமும் நிதிநிட்
44. டுசெயமும் மற்றும் யெப்பெயற்ப
45. ட்ட சொற்பதார்த்தமும் உள்படக் கிறை
46. றய உதக பூறுவ தானப்பிறமாண
47. ......................................................
பின்புறம்
1. ண்டு இந்தக்கிறாமத்திலே நாலிகுசா
2. தியும் பல பட்டடையும் கடையும்
3. டைத்தெருவும் வைய்த்து
4. போட்டுக் கொண்டு வெகு குடியேத்த
5. வளம் பண்ணிக் கொள்ளுவாராக
6. வும் இந்தக் கிறாமத்திலே வருகிற
7. பகுதி மேடை விலாட மென்று அரம
8. னையார் கூட்டின இறைகலூம் சில்வரி
9. பெருவரி ஊழியப்பாளையும் ஆள் அ
10. மஞ்சி இஞ்சது வரிஞ்சது சகலமும் ந
11. நாங்களே மேல் வைய்த்து இறுத்துக் கொடுப்
12. போமாகவும் இந்தக் கிறாமத்தை இ
13. யாதாமொருவர் பரிபாலனம் பன்ணி
14. நடத்தி வந்த பேர்கள் சாலோக சாமீ
15. ப சாரூப சாயுச்சிய பதவியும் கெங்
16. கைக் கரையிலே அசுவ மேத யாக
17. மும் பண்ணின பலனும் பெறக்கடவா
18. ராகவும் இந்தக் கிறாமத்துக்கு அகுதம்
19. பண்ணின பேர்கள் கெங்கைக் கரையி
20. லே காராம் பசுவைக் கொன்ற தன்
21. ஷத்திலும் சன்னியாசியள் தலையிலே
22. நெருப்பிட்டெரித்த தோசத்திலும் போ
23. மாதாபிதாவை தன் கய்யினாலே
24. அடித்துக்கொன்ற தொஷத்திலும் போ
25. கக் கடவாராகவும் இப்படி சம்மதித்து
26. கிறய உதக பூர்வ தானப் பிறமாண
27. ப்பட்டய[ம்] எழுதிக் குடுத்தோம் சு
28. வாமி கைஆய நாதர் கோவில்ச் சீப
29. ண்டார காரியம் செய்வார்களுக்
30. குக் குல சேகரன் பட்டணம் மாகாணி
31. னாட்டார் குமார சுவாமியாபிள்ளை மூப்
32. பனாரும் முதலி நயினா பிள்ளையும்
33. மாத்தாண்ட பிள்ளையும் பெற்ற
34. குட்டி கரையாளனும் அடைக்க
35. லம்ங்காத்தா பிள்ளையும் மற்றும்
36. உண்டான நாட்டாரும் சந்திராதிச்
37. சனாடானும் திருப்பாப்பு நாடா
38. னும் அருதகுட்டி ஆதிச்சனாடானு
39. ம் திருக்கைவேல் ஆதிச்சனாடானு
40. னும் குளந்தை வீரமாத்தாண்ட நா
41. டனும் மற்றும் உண்டான நாடாக்களு
42. ம்மோம் இப்படிக்கு பட்டய[ம்] எழு
43. திக் கொடுத்தோம் இப்படிக்கு குமாரசு
44. வாமி எழுத்து வெளிநின்ற பெருமாள் எ
45. ழுத்து முதலி[ந]யினான் பெற்றகுட்டி எழு
46. த்து செண்பகராமன் அடைலங்காத்
47. தான் சந்திராதிச்ச நாடவான் எழுத்து
48. வீரமாத்தாண்ட நாடன் எழுத்து
49. திருப்பாப்பு நாடவான் எழுத்து இப்படிக்கு
50. இவர்கள் சொல்ல இ
51. ந்தப் பட்டயம் எழுதிநேன் ம
52. ருதூர் வேளாளன் எழுத்து.
மானவீர வளநாட்டில் தென்பத்தில் மேற்கண்ட பிரபுக்கள் ஆட்சியுரிமையுடன் வரிவசூல் செய்துள்ளனர்.
குலசேகரன்பட்டினம் குமாரசுவாமியா பிள்ளை மூப்பனார், பள்ளக்குறிச்சி முதலி நயினாப்பிள்ளை, அரசி மீண்டான் கிணறு மார்த்தாண்ட பிள்ளை, கூத்தாடி நல்லூரிலிருக்கும் கரையாளன்,
வீர மாத்தாண்ட நல்லூர் அடைக்கலங்காத்தா பிள்ளை,
குட்டம் சந்திராதிச்ச நாடான், கொம்மடிக்கோட்டை திருப்பாப்பு நாடான், படுகைப்பற்று அருதகுட்டி ஆதிச்ச நாடான், மாதவன் குறிச்சி திருக்கைவேலாதிச்ச நாடான், பெரிய கண்டன் வடலி வீர மாத்தாண்ட நாடான்.
------------------------------------
முனைவர் தவசிமுத்து மாறன்
No comments:
Post a Comment