நாடான் வேறு-நாடாள்வான் வேறு அல்ல.கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளலூர் கல்வெட்டு இதற்கு மிகுந்த வலிமை சேர்க்கிறது. தென் சிறு வாயில் நாட்டு அரசன் நாடன் என்றும் அவன் மகன் நாடாள்வான் என்றும் இதில் சுட்டப்படுகிறான்.கல்வெட்டின் ஒரு பகுதி இதுவாகும்.
// செம்பிய முடி காப்போன் சிறுவாயி நாடன்
மாலன் செய் முடிகொண்ட சோழ நாடாள்வான்// என்று தெளிவு படுத்துகிறது.
செம்பியன் என்பது சோழர்களின் பட்டப்பெயராகும். வலங்கை வாழ்த்து எனும் நூல் ''செம்பியர்க்கு வாய்த்த தம்பி நாடாக்கள்'' என்று பாடுகிறது. இதை உறுதி செய்யும் இன்னொரு செய்தியும் இருக்கிறது.தமிழ்நாடு அரசின் தூத்துக்குடி மாவட்ட கெஜட்டியர் மேலும் சில செய்திகளை வழங்குகிறது.
An inscription of about 700 years old, engraved in a grave stone near periya kuthafa palli mentions Mannavarukku Maruguar kali...Yaana sempi Nadan...(ie) one chembi nadan (chembian is one of the titiles for the chola kings and so chembi nadan is of chola clan )is the son-in law of the pandiya kin// என்ரு குறிப்பிடுகிறது.
உமரிக்காடு ஆத்தங்கரை சாமி பாட்டு எனும் நாட்டுப்புற பாட்டு உமரிக்காட்டி வாழுகின்றவர்களின் (கொற்கையின் தென் பகுதி ) மிகவும் போற்றிப்புகழ்கிறது.
//செம்பிவள நாடன் ரவிகுல சந்திரன் சூரியகுல சந்திரன் என்றெல்லாம் வியந்தோதுகிறது.
மூவேந்த மரபினர் சூரியகுலம் என்றும் சந்திரகுலம் என்றும் தம்மை குறிப்பிட்டுக்கொண்டவர்கள். சிதம்பர நாத முதலியார் இயற்றிய சீவல மாறன் கதையும் இப்பகுதியில்தான் பாடப்பட்டு வந்தது.
இக்கதைப்பாடல் தென் காசிப்பாண்டியர்களுக்கும் சோழ மரபினர்க்கும் இடையிலான திருமண உறவுகளை தெளிவாக விளக்குகிறது. தென்காசிப்பாண்டியனின் பெயரும் காசிநாடன் என்பதாகும்.
No comments:
Post a Comment